தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்

 மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்


கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ₹55,000-ஐ கடந்தது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ஒரு சவரன் ₹55,080க்கும். கிராமுக்கு ₹60 உயர்ந்து ஒரு கிராம் ₹6,885க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ஒரு கிராம் ₹97.50க்கும், கிலோ ₹97,500க்கும் விற்கப்படுகிறது.


தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்


ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை, 0.25% குறைத்தது. இதனால், முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்த முதலீட்டை எடுத்து, தங்கமாக மாற்றி வருகின்றனர். அத்துடன், பல நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், முதலீட்டாளர்கள், தங்களின் முதலீட்டை தங்கமாக மாற்ற துவங்கியுள்ளனர். இதனால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயரும் என தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.


திடீரென தங்க விலை ஏன் உயர்கிறது?

தங்கம் விலை மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்


தங்கத்தின் விலையேற்றம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியும், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் அளித்துள்ளது. FED வங்கி வட்டி விகிதக் குறைப்பு, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம், டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பாதுகாப்பு கருதி தங்கம் & ETFஇல் பலர் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவாகவே கடந்த வாரத்தில் (10 கிராம் 24 C தங்கத்தின் விலை ₹77,020) அபரிமிதமாக உயர்ந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்