வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு

 வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு!

வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு


பார்சி வழக்கப்படி, இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்கள். மனிதன் இயற்கையின் பரிசு என்றும், அதை திருப்பித்தர வேண்டும் எனவும் அவர்கள் நம்பினர். இதனால் பண்டைய காலத்தில் ஊர் எல்லையில், DAKHMA என மண் கோபுரம் அமைத்து, உடலை வைத்துவிடுவர். இயற்கையாய் சிதைந்து போகும் வகையிலும், பறவைகளுக்கும் உடல் உணவாகிவிடும். ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப, அந்த வழக்கம் தற்போது இல்லை. டாடாவின் உடல் எரியூட்டப்பட்டது.


ரத்தன் டாடா மறைவு: அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு


தொழிலதிபர் ரத்தன் டாடாவின் (86) உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும், அவரது மறைவுக்கு ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், அரசுக் கட்டடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறிய கார்; பெரிய கனவு!

வழக்கத்திற்கு மாறாக டாடாவின் இறுதிச்சடங்கு


கார் என்பது பணக்காரர்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்றி இந்திய குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் கார் இருக்க வேண்டுமென்ற கனவுடனே 'Nano'வை டாடா உருவாக்கினார். 1 லட்சம் விலையில் கார் என்பது, நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால், 'மலிவு விலை' என்பதே Nanoவின் வீழ்ச்சிக்கும் காரணமானது. எதிலும் ஏற்றத்தாழ்வை பார்க்கும் நம்சமூகம், 'Low price car' என்பதை அந்தஸ்து குறைவாக கருத, Nanoக்கு வீழ்ச்சியாக அது அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்