அவர் ஒரு கருத்தியல் அடையாளம்: CM ஸ்டாலின்

 அவர் ஒரு கருத்தியல் அடையாளம்: CM ஸ்டாலின்



இந்தியாவில் கருத்தியல் அடையாளமாக வாழ்ந்தவர் சீதாராம் யெச்சூரி என CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவை அடுத்து, சென்னையில் அவரது நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய CM, இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் யெச்சூரி எனவும், அனைவருக்கும் அவர் சொந்தமானவர் எனவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். முன்னதாக அவரது உருவப் படத்திற்கு CM மரியாதை செலுத்தினார்.


வெறுப்பை அன்பினால் வெல்வோம்: ராகுல்



இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம். பிரதமர் மோடியின் 'உளவியலை' நாம் அன்பினால் உடைத்துள்ளோம் எனக் கூறிய அவர், காங்கிரஸின் முதன்மையான கோரிக்கை மீண்டும் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் என்றார்.


நாளை ஆர்ப்பாட்டம் .. பெண்களுக்கு அதிமுக அழைப்பு



தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இதை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராகவும் அதிமுக நாளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறப்போராட்டத்தில், மாணவிகள், தாய்மார்கள் என அனைத்து மகளிரும் கலந்துகொள்ளுமாறு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்