"பிரதமரின் விமானத்திற்கு பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் - பாதுகாப்பு எச்சரிக்கை"
பிரதமர் மோடியின் USA பயணத்திற்கு முன்னதாக, அவரது விமானம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீசாருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார், மிரட்டல் அழைப்பு விடுத்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரதமர் நாளை USA செல்கிறார்.
ஐகோர்ட் தீர்ப்பால் இபிஎஸ்-க்கு பின்னடைவு
அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் (ECI) விசாரிக்க அனுமதி வழங்கிய ஐகோர்ட்டின் தீர்ப்பு இபிஎஸ் -க்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள சூழலில் எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாடு குறைய ஆரம்பிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.
செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?
அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஸ் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
"பணக் கொழுப்பு" சீமான் சர்ச்சை பேச்சு
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, "பணக்கொழுப்பு அதிகம் இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்" என சீமான் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் தொடர்பான அவரது சர்ச்சையே இன்னும் முடியவில்லை. ஏற்கெனவே திமுக, பெரியாரிஸ்டுகள் சீமானை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், தவெக தொண்டர்களும் எதிராக திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
இந்தியர்களை அடிமை போல் நடத்தும் டிரம்ப்: கார்கே
பிரதமர் மோடியின் நண்பர் டொனால்ட் டிரம்ப், இந்தியர்களை அடிமைகள் போல் நடத்துவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை, பயணிகள் விமானத்தில் அனுப்பாமல், சரக்கு விமானத்தில் அனுப்புவது அதையே காட்டுவதாகவும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்